Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

கூட்ட நெரிசல்: பக்தர்களின் வசதிக்காக சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு

திருவனந்தபுரம், கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்குவதை தவிர்க்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ம் தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. தினமும் பக்தர்கள் வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கலில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரையிலும், பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என கருதப்படுகிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதி நடக்கிறது. மண்டல பூஜை முடிந்ததும் அன்று இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்றை தினம் முதல் ஜனவரி 15-ம் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகிறது.
ஜனவரி 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ம் தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறுகிறது.

சபரிமலை மண்டல பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 4.23 லட்சம் இலவச டிக்கெட்: 9 இடங்களில் வழங்க ஏற்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 20.04.2025 முதல் 26.04.2025 வரை
  • வார ராசி பலன்கள் 13.04.2025 முதல் 19.04.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com