Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் வீதி உலா: மதுரை மீனாட்சிக்குஇன்று பட்டாபிஷேகம்

மதுரை, ஏப். 30- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 7-ம் நாளான நேற்று தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுடன் வீதி உலா வந்து அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 7-வது நாளான நேற்று காலை தங்க சப்பரத்தில் பிச்சாடனர் கோலத்தில் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுடன் உலா வந்தார்.
இறைவனை மறந்த ரிஷிகளுக்கும், ரிஷிபத்தி னிகளுக்கும் உணர்த்தும் வகையில் பிச்சாடனர் கோலத்தில் சுவாமியும்- அம்பாளும் பிச்சை பாத்திரம் ஏந்தி வலம் வந்தனர். 4 மாசி வீதிகள் வழியாக பிச்சாடனர் கோலத்தில் வலம் வந்த சுவாமிகளுக்கு பக்தர்கள் பிச்சையளித்தனர். வீதி உலா முடிந்து மீண்டும் கோவிலுக்கு வந்த சுவாமி- அம்மன் சிவகங்கை ராஜா மண்டகப்படி, மீனாட்சி நாயக்கர் மண்டபங்களில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து இரவு நந்திகேசுவரர், யாழி வாகனத்தில் சுவாமி- அம்மன் 4 மாசி வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் நிகழ்ச்சி இன்று (30-ம் தேதி) நடக்கிறது. இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி நவரத்தினத்தாலான செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ண னிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார்.
பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 மாசிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ம் தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

2-ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்: தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் நாளைகுன்றத்தில் இருந்து புறப்பாடுதஞ்சை பெரிய கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 20.04.2025 முதல் 26.04.2025 வரை
  • வார ராசி பலன்கள் 13.04.2025 முதல் 19.04.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com