Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது

திருச்சி, ஏப். 10- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். ஆண்டின் அனைத்து நாட்களிலும் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 7.20 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன் எழுந்தருளினார்.
பின்னர் 7.41 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கோவில் குருக்கள் கொடிமரத்தில் அம்மன் படம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன , ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரகுதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வரும் 17-ம் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வழிநடை கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 18-ம் தேதி (செவ் வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளுகிறார்.
அதைத் தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 19-ம் தேதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடாகிறார். 20-ம் தேதி அம்மன் முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். 21-ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 8 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
வரும் 25-ம் தேதி இரவு அம்மன் தங்க கமல வாகனத்திலும் புறப்பாடாகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, மணிகாரர் பழனிவேல் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் வெகுவிமரிசையாக நடந்த முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்தமிழகம் முழுவதும் தேவாலங்களில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 13.07.2025 முதல் 19.07.2025 வரை
  • திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
  • வார ராசி பலன்கள் 06.07.2025 முதல் 12.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com