Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

ஐப்பசி மாத பிறப்பையொட்டி காவிரியிலிருந்து எடுத்து வந்த புனித நீரால் : ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம்

திருச்சி, அக். 19- ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி திருச்சி அம்மா மண்டபம் காவிரியிலிருந்து தங்க குடத்தில் யானை மீது வைத்து புனித நீர் எடுத்து வந்து நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் காவிரி புனிதமாவதாகவும், ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
வழக்கமாக மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு வரப்படும். ஆனால் ஐப்பசி மாதம் மட்டும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக ரங்கநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்படும். அந்த புனித நீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி நேற்று ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 5.45 மணிக்கு காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், மேலும் வெள்ளி குடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டும் மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
இதையொட்டி நம்பெருமாள் தங்கத்தால் ஆன பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காலை 10 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 10.30 மணிக்கு சந்தனு மண்டபத்தை வந்தடைந்தார். காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார்.
இதைத் தொடர்ந்து மாலை சந்தனுமண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு மூலஸ்தானத்தை சென்றடைந்தார். துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள் மற்றும் தாயார் தங்க ஆபரணங்கள், சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நவராத்திரி பிரமோற்சவ கருட சேவை : தமிழகத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கம்பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 23-ம் தேதி அல்பாசி ஆராட்டு விழா : திருவனந்தபுரத்தில் விமான சேவை நிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com