Skip to content
NallaNaal

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா தொடங்கியது

தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக நேற்று காலை இறைவணக்கம், மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கம் நடைபெற்றது. இதையடுத்து தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சதய விழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்றார். விழாவிற்கு தலைமை தாங்கி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்புரையாற்றினார். பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு அரண்மனை பரம்பரை தேவஸ்தானம் அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபால கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசந்திரன், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், பேராசிரியர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பழநி ஆதீனம் குருமகா சந்நிதானம் சாது சண்முக அடிகளார் அருளுரை வழங்கினார். அதனை தொடர்ந்து வரலாறாக வாழும் மாமன்னன் ராசராசன் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதையடுத்து பிற்பகலில் நாதசுரம், பரதநாட்டியம், யாழ் இசை, வில்லுப்பாட்டு ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் 2-ம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 7 மணிக்கு கோவில் பணியாளர்களுக்கு கயிலை மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை புத்தாடைகள் வழங்குகிறார்.
காலை 7.20 மணிக்கு அரசு சார்பில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவாமூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜவீதிகளில் திருஉலா நடைபெறும்.
காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடக்கிறது. மதியம் 1.30 மணியளவில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும். தொடர்ந்து 1039 கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன் சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வார ராசி பலன்கள் 03.11.2024 முதல் 09.11.2024 வரைசபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 29.06.2025 முதல் 05.07.2025 வரை
  • வார ராசி பலன்கள் 22.06.2025 முதல் 28.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 15.06.2025 முதல் 21.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 08.06.2025 முதல் 14.06.2025 வரை
  • வார ராசி பலன்கள் 01.06.2025 முதல் 07.06.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com