Skip to content
NallaNaal

    • Enter a date to search

Menu
  • இன்றைய நாள் எப்படி
  • விடுமுறை & முக்கிய நாட்கள்
  • ஆன்மீகம்
  • ராசி பலன்கள்
Menu

வேளாங்கண்ணி ஆலய பெருவிழா: பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது

நாகப்பட்டினம், செப். 07- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று (7-ம் தேதி) இரவு பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். செப்டம்பர் 7-ம் தேதி இரவு பெரிய தேர்பவனியும், மறுநாள் (8-ம் தேதி) அன்னையின் பிறப்பு விழாவும் நடைபெறும்.
இதன்படி இந்த ஆண்டு பெருவிழா கடந்த 29-ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (7-ம் தேதி) இரவு நடக்கிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமை வகித்து தேரை புனிதம் செய்து வைக்கின்றனர்.
பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் துணைஅதிபர், பங்குதந்தைகள், அருட்சகோதரிகள் முன்னிலையில் ஜெபமாலை, கூட்டுத்திருப்பலி திருத்தல கலையரங்கில் நடக்கிறது. இதை தொடர்ந்து புனிதம் செய்யப்பட்ட தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடையும். புனித ஆரோக்கிய அன்னை பெரியத்தேரில் எழுந்தருள்வார்.
அதைத்தொடர்ந்து பெரிய தேரின் முன்பு 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோர் எழுந்தருவார்கள். தேர் பேராலயம் வந்தடைந்தவுடன் திரண்டு நிற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒருசேர மரியே வாழ்க, ஆவே மரியா, பசலிக்கா, பசலிக்கா என்ற பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் வகையில் குரல் எழுப்புவார்கள்.
அப்போது பேராலய கோபுரங்களில் வண்ண மின்விளக்குகள் எரிய விடப்படும். இதை தொடர்ந்து பல்வேறு நிறங்களில் ஒளிச்சிதறல் ஏற்பட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்னொளியில் ஜொலிக்கும்.
நாளை (8-ம் தேதி) காலை தஞ்சை மறைமாவட்ட ஆயர் பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் விண்மீன் ஆலயத்தில் கூட்டு திருப்பலியுடன் அன்னையின் பிறப்பு விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவடையும்.
வேளாங்கண்ணி விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் குடந்தை கோட்டம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 24 மணி நேரமும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதே போல் தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நாளை 8-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 23-ம் தேதி அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 பெரிய கோபுரங்களுக்கு பாலாலயம் - யாக குண்டம் அமைத்து சிறப்பு பூஜைநாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

    • Enter a date to search

விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள்

  • 2025 இந்துக்கள் பண்டிகை
  • 2025 கிறிஸ்துவர்கள் பண்டிகை | List of Christian holidays
  • 2025-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2025
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2025
  • 2025-ல் வாகனங்கள் வாங்குவதற்கான நல்ல நாள் / Vehicles buying Auspicious Dates – 2025
  • 2025 முஸ்லீம்கள் பண்டிகை | List of Muslim holidays
  • கெளரி பஞ்சாங்கம் – 2025
  • 2025 மாத விரத நாட்கள் – அமாவாசை, பெளர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி
  • 2025 ம் ஆண்டிற்கான தமிழக அரசு விடுமுறை நாட்கள்
  • 2024-ம் ஆண்டு சுபமுகூர்த்த தினங்கள் | Subamuhurtha Dates in 2024
  • கிரகபிரவேச முகூர்த்த நாட்கள் -2024
  • 2024-ல் சொத்து வாங்குவதற்கான நல்ல நாட்கள்/Auspicious Dates For Property Registration in 2024

முக்கிய செய்தி

  • வார ராசி பலன்கள் 04.05.2025 முதல் 10.05.2025 வரை
  • ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
  • வார ராசி பலன்கள் 27.04.2025 முதல் 03.05.2025 வரை
  • வார ராசி பலன்கள் 20.04.2025 முதல் 26.04.2025 வரை
  • வார ராசி பலன்கள் 13.04.2025 முதல் 19.04.2025 வரை
©2025 NallaNaal | Nallanaal.com