
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:-
பிப்ரவரி 9-ம் தேதி புரந்தரதாசர் ஆராதனோற்சவம், 10-ம் தேதி திருக்கச்சிநம்பி உற்சவம் தொடக்கம், 14-ம் தேதி வசந்த பஞ்சமி, 16-ம் தேதி மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா, 19-ம் தேதி திருக்கச்சிநம்பி சாத்துமுறை, 20-ம் தேதி பீஷ்ம ஏகாதசி, 21-ம் தேதி குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம், 24-ம் தேதி குமாரதாரா தீர்த்த முக்கோட்டி உற்சவம், மக பவுர்ணமி கருடசேவை போன்ற விழாக்கள் நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.